லங்கை கிரிக்கெட்டை பொறுத்தவரை அண்மைக்காலம் மிகக் கடினமானது. அதற்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில் அணி மீதும் அதிகாரிகள் மீதும் பலவகையான விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றமை அணிக்கு மேலும் நெருக்கடியாகவே இருந்து வருகின்றது.
ஜிம்பாப்வேயிடம் 2-3 என ஒருநாள் தொடரை தோற்றதை அடுத்து அஞ்செலோமெதிவ்ஸ் அணித்தலைமை பொறுப்பில் இருந்து இராஜினாமா செய்தார்.
இந்த துயர நிலையின் தொடர்ச்சியாக இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள்மற்றும் T-20 என அனைத்து போட்டிகளிலுமே இலங்கை ஒட்டுமொத்தமாக 0-9 எனதோல்வி கண்டது. இந்த இரண்டு நிகழ்வுகளும் இலங்கை கிரிக்கெட் வரலாற்றில்இதற்கு முன்னர் ஒருபோதும் இடம்பெற்றதில்லை.
அணியின் தற்போதைய நிலை முன்னாள் வீரர்களின் விமர்சனங்களுக்குஉள்ளானதோடு அணியில் முன்னேற்றம் இன்மை குறித்து ரசிகர்கள் கூடகளைப்படைந்துவிட்டனர். இதன் தொடர்ச்சியாக அணி தேர்வுக் குழுவின்உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துவிட்டனர்.
உண்மையில் இவ்வாறான கடினமான தருணத்திலும் எதிர்காலத்தில் நம்பிக்கைதரக்கூடிய சாதகமான சூழல் இருக்கத்தான் செய்கிறது. நெருக்கடிகளுக்கு மத்தியில்அவ்வாறான திறமைகள் மற்றும் அனுகூல நிலை கண்ணில் தென்படாமல் இருப்பதுவழக்கமானதே.
எனவே, இலங்கை அணி முன்னேற்றப்பாதையில் செல்வதற்கு உள்ள நம்பிக்கை தரும் ஐந்து விடயங்கள் பற்றிப் பார்ப்போம்.
5. காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர்களின் மீள் வருகை
இலங்கை அணி தனது வழக்கமான சில வீரர்கள் இன்றியே அண்மைய தினங்களில்ஆடிவருவதை மறந்துவிடக்கூடாது. மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் இதனைஅதிகம் பார்க்கலாம். நுவன் பிரதீப், சுரங்க லக்மால் மற்றும் அசேல குணரத்ன போன்றவீரர்கள் அணியில் தொடர்ச்சியாக இடம்பிடிக்கும் வீரர்கள் என்றபோதும் காயங்களால்அண்மைக் காலத்தில் அவர்கள் விளையாடுவதில்லை என்பது தளம்பலைஏற்படுத்தியது.நுவன் பிரதீப்
இந்தியாவுடனான முதல் டெஸ்டில்பந்துவீச்சாளர்களுக்கு அதிக சாதகமற்றஆடுகளத்தில் கூட நுவன் பிரதீப் எதிரணியைதள்ளாடச் செய்து ஆறு விக்கெட்டுகளைவீழ்த்தி இருந்தார். எனவே அவர் அல்லதுலக்மால் இல்லாதது அணிக்கு பெரும்பின்னடைவாகவே இருந்தது. மாலிங்க டெஸ்ட்அணியில் இருந்து ஒதுங்கிக் கொண்டவேளையில் இவர்களே வேகப்பந்து வீச்சில்பலம் சேர்த்தனர். ஆனால் இவர்களால்கிட்டத்தட்ட கடந்த ஓர் ஆண்டாக அணியில்தொடர்ச்சியாக விளையாட முடியாமல் போனது.
சுரங்க லக்மாலின் வேகம் மற்றும் நேர்த்தியான பௌன்ஸர்கள் இந்திய துடுப்பாட்டவீரர்களை தடுமாறச் செய்திருக்கக் கூடும்.
லஹிரு குமார உற்சாகமாக பந்துவீசி தனது வேகத்தால் இந்திய வீரர்களைஅதிர்ச்சியுறச் செய்தபோதும் அவரால் சரியாக சோபிக்க முடியவில்லை. அவர்ஒவ்வொரு ஓவரிலும் விட்டுக் கொடுத்த பௌண்டரிகள் எதிரணிக்கு அழுத்தத்தைகுறைத்தது.
பெரும்பாலான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தொடர்ச்சியாக மணிக்கு 140 கிலோ மீற்றர் வேகத்தை வைத்திருக்க முடியாத நிலையில் அவ்வாறான திறமையைவெளிக்காட்டிய குமார மற்றும் சமீரவால் ஆகியோராால் சோபிக்க முடியும் என்றநம்பிக்கை அதிகமாக உள்ளது.
குமார மற்றும் சமீரவுடன் லக்மால் மற்றும் பிரதீப் அணிக்கு திரும்பினால் அந்த கலவைஇலங்கை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பஞ்சத்தை ஏற்படுத்தாது. அது எதிரணிதுடுப்பாட்ட வீரர்களுக்கு அதிக சவால் கொண்டதாக இருக்கும்.
உண்மையில் தற்போதைய டெஸ்ட் அணிகள் அனைத்தையும் பார்த்தோம் என்றால்இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் எந்த ஒரு அணியின்வேகப்பந்து வீச்சு வரிசையும் பலம் கொண்டதாக இல்லை.
4. ரங்கன ஹேரத், லசித் மாலிங்கவிடம் தங்கியிருக்கும் யுகம் முடிகிறது
முத்தையா முரளிதரன் மற்றும் சமிந்த வாஸ் ஆடிய காலத்தில் அவர்கள் அணிக்கு பலம்சேர்த்தது போலவே ரங்கன ஹேரத் மற்றும் லசித் மாலிங்க ஆகியோரும் இன்றியமையாத வீரர்களாக உள்ளனர். டெஸ்ட் போட்டிகளை பொறுத்தவரைஇலங்கை அணி ஹேரத்தின் சுழலில் தங்கியிருப்பதோடு ஒருநாள் மற்றும் T-20 போட்டிகளில் மாலிங்கவின் வேகம் இலங்கை அணிக்கு தேவைப்படுகிறது.லசித் மாலிங்க
எனினும் காயங்கள் மாற்று வீரர்கள் பற்றி யோசிக்வேண்டிய தேவையை ஏற்படுத்தியது. இதனாலேயே அகிலதனன்ஜய மற்றும் மலின்த புஷ்பகுமாரவுக்கு அணியில்இடம் பிடிக்க முடிந்தது.
புஷ்பகுமார அதிக தாக்கம் செலுத்தும் வீரராகஇருப்பதோடு அவரது பலம் மற்றும் நிதானம் காயமடைந்தரங்கன ஹேரத்தின் இடைவெளியை நிரப்ப போதுமாகஇருந்தது. இது இலங்கை அணி ஹேரத்துக்கு மாற்று வீரரையோசிக்கும் நேரத்தில் சாதக சூழலாக உள்ளது.
எனினும் ஹேரத்தின் இடத்தை பிடிக்க புஷ்பகுமார நீண்டதூரம் செல்ல வேண்டி இருக்கும் என்பதோடுதற்போதைக்கு அவர் சிறந்த மாற்று தேர்வாக மாறிஇருக்கிறார் என்ற வகையில் நல்லதே.
இதே நிலைமையே மாலிங்கவின் கோணத்திலும் ஏற்பட்டுள்ளது. அவர்இந்தியாவுடனான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களில் எதிர்பார்த்த அளவுசோபிக்காதபோது அகில தனன்ஜய மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் அதிகவிக்கெட்டுகளை வீழ்த்தினர்.
சமீர, குமார மற்றும் லக்மால் போன்ற வீரர்கள் தமது ஆட்டத் திறமையை அதிகரித்துக்கொண்டால் மாலிங்கவின் இழப்பு பெரிதாக இருக்காது. இது அவரது ஓய்வுக்கு பின்பும்இலங்கை பந்துவீச்சு பலவீனம் அடைவதை தவிர்க்க போதுமாக இருக்கும்.
3. திறமையை காட்டும் துடுப்பாட்ட வீரர்களின் ஆட்டம்
ஒட்டுமொத்தமாக பார்த்தோம் என்றால் இந்தியாவுடனான போட்டிகளில்இலங்கையின் துடுப்பாட்டம் அதிருப்தி கொள்வதாகவே இருந்தது. டெஸ்ட்போட்டிகளில் அவர்கள் சுழற்பந்து வீச்சாளர்களிடம் சரணடைந்தனர். ஒருநாள் தொடர்மற்றும் ஒரு T-20 போட்டிகளில் விக்கெட்டுகளை வரிசையாக பறிகொடுத்து ஒட்டங்கள்குவிக்கத் தவறினர்.
இவை எல்லாவற்றுக்கும் மத்தியில் டெஸ்ட் போட்டிகளில் குசல் மெண்டிஸ் மற்றும்திமுத் கருணாரத்ன அபார சதங்கள் குவித்தனர். நிரோஷன் திக்வல்ல தொடர்ச்சியாகஓட்டங்களை பெற்றார்.திரிமான்ன மற்றும் சந்திமால்
அணியின் தூண்களாக அஞ்செலோ மெதிவ்ஸ், உபுல் தரங்க மற்றும் டினேஷ் சந்திமால் உள்ளநிலையில் ஏனைய இளம் வீரர்களும்முழுமையாக தமது திறமைகளை காட்டினால்இலங்கை அணிக்கு பூரணமான துடுப்பாட்டவரிசை ஒன்று கிடைக்கும்.
குசல் மெண்டிஸ் தன்னால் சிறப்பாகதுடுப்பாட்ட வீரராக வர முடியும் என்பதைஇந்த தொடர் மூலம் காட்டியதோடுகருணாரத்ன நெருக்கடியான நேரத்தில்திறமையாக ஆடி இருந்தார். இவர்கள் இருவராலும் இணைந்து இந்திய பந்து வீச்சாளர்களுக்கு ஓரளவு நெருக்கடி கொடுக்க முடிந்தது.
ஒருநாள் தொடரை பொறுத்தவரை மெதிவ்ஸ், தரங்க சோபிக்கவில்லை. லஹிருதிரிமான்ன தனது அனுபவ ஆட்டத்தை காட்டி இருந்தார். அவரது முன்னேற்றம் ஒருநாள்போட்டிகளில் அணி நல்ல பாதையை நோக்கி செல்வதற்கான சமிக்ஞையைகாட்டியுள்ளது.
அசேல குணரத்ன சகலதுறை வீரராக முக்கியமான நேரங்களில் விக்கெட்டுகளைவீழ்த்துவதோடு பின் வரிசையில் வேகமாக ஓட்டங்களை குவிக்கிறார். அவர்காயத்தால் இந்தியாவுடனான ஒருநாள் தொடரில் விளையாடவில்லை. அவரதுஇடத்திற்கு வந்த மிலின்த சிரிவர்தன சிறந்ததொரு பந்துவீச்சு தேர்வு என்பதையும்முக்கிய நேரங்களில் ஓட்டங்கள் பெறுபவர் என்பதையும் நிரூபித்துள்ளார்.
2. அனைத்து போட்டிகளிலும் சோபித்த நிரோசன் திக்வல்ல
அதிகம் கவரக் கூடிய துடுப்பாட்ட வீரராகவும் எல்லா பந்துகளிலும் ஓட்டங்களைதேடுபவராகவுமே திக்வல்லவை பார்க்க முடியும். அதேபோன்று அனைத்து வகைகிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கையின் முதல் நிலை விக்கெட் காப்பாளராகவும்அவர் தம்மை நிரூபித்துள்ளார்.
அவர் இந்தியாவுடனான தொடர் முழுவதும் ஓட்டங்களை பெற்றவராக இருந்ததோடுதைரியமாக பந்துகளுக்கு ஓட்டங்களை குவிப்பவராகவும் தன்னைக் காண்பித்துள்ளார். எனினும் அவர் மிக விரைவில் விக்கெட்டை பறிகொடுப்பவராக இருந்ததை தொடர்முழுவதிலும் பார்க்க முடிந்தது.
களத்தடுப்பில், விக்கெட்டுக்கு பின்னால் ஒரு சுறுசுறுப்பான விக்கெட் காப்பாளராக,திறமையாக பந்தை தடுப்பதோடு தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளைகைவிடாதவராகவும் உள்ளார். இந்த பண்புகள் இலங்கை அணிக்கு ஒரு சிறந்தஎதிர்காலத்தையே காட்டுகிறது.
தற்போதைய நிலையில் திக்வல்ல ஒரு விக்கெட் காப்பாளராக அனைத்து வகைகிரிக்கெட்டிலும் எவ்வாறு செயற்படுகிறார் என்பது குறித்து அவதானத்துடன் இருப்பதுஅவசியமாகும். எனவே அவரை நல்ல முறையில் கையாள்வது அவசியம் என்பதோடுஅதிக சுமைகளை சுமத்துவது பாதகமாகவே முடியும்.
1. அகில தனன்ஜய – அடுத்த அஜன்த மெண்டிஸா?
2008 ஆம் ஆண்டு அஜன்த மெண்டிஸ் தனது கன்னி டெஸ்டில் இந்தியாவைஎதிர்கொண்டபோது அவரது பந்துவீச்சு இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு மாயமாகஇருந்ததை மறந்திருக்க மாட்டார்கள். அந்த டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸ்களிலும்மெண்டிஸ் மொத்தம் 8 விக்கெட்டுகளை வீழ்த்த இலங்கை அணியால் அந்த டெஸ்ட்போட்டியை இன்னிங்ஸால் வெல்ல முடிந்தது. அகில தனன்ஜய
காலம் போகப்போக மெண்டிஸின் புதிர்பந்துவீச்சை அலசி ஆராய்ந்த எதிரணியினர்அவருக்கு முகம்கொடுக்க பழகிக்கொண்டார்கள். இது அவர் தேசிய அணியில்இருந்து விடுபடுவதற்கு காரணமானது.
எனினும் இந்திய அணி தற்போது வலுவாகஇருப்பது மட்டுமல்ல அதன் துடுப்பாட்டவீரர்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்குதிறமையாக முகம்கொடுக்கின்றனர்.
இலங்கையுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இளம் சுழற்பந்து வீச்சாளர்அகில தனன்ஜய இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அணித் தலைவர் கோலி, ராகுல் மற்றும் ஜாதவ் என்று இந்திய துடுப்பாட்ட வரிசையை சாய்த்துமொத்தம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
எம்.எஸ் தோனி மற்றும் புவனேஷ்வர் குமாரின் எட்டாவது விக்கெட் இணைப்பாட்டம்கைகொடுக்காவிட்டால் இந்திய அணி அந்த போட்டியில் தோற்றிருக்கும்.
இந்த பந்து வீச்சை தவிர்த்து பார்த்தால் ஒருநாள் தொடரில் தனன்ஜயவுக்கு இந்தியஅணி ஒப்பீட்டளவில் அதிக நெருக்கடி இல்லாமல் துப்பெடுத்தாடியது. ஆனால் அவரதுபந்து வீச்சு தொடர்ந்து எதிரணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு சவாலாக இருப்பதோடுதொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்தக் கூடியதாகவும் உள்ளது.
உண்மையில் இலங்கை அணி மற்றொரு மெண்டிஸை கண்டுபிடித்திருக்கிறதா என்றகேள்விக்கு விரைவாக பதில் கூற முடியாதிருக்கிறது. தனன்ஜயவின் தொடர்ச்சியானஆட்டத் திறமையே அதனை நிரூபிக்கும். எப்படி இருந்தாலும் இப்போதையதருணத்தில் தனன்ஜய இலங்கை அணியின் அதிக நம்பிக்கை தரும் வீரராகமாறிவிட்டார்.
மூலம்: www.sportskeeda.com


Post a Comment