Showing posts with label Sports. Show all posts



இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், இலங்கை பீல்டர் ஏமாற்ற, இந்திய கேப்டன் விராட் கோலி, 5 ரன்கள் கொடுக்கும்படி கேட்டார்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடக்கிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 172 ரன்களுக்கு சுருண்டது.


இந்நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்த போது, இலங்கையின் கேப்டன் சண்டிமால், பந்தை பிடிக்காமலேயா பிடித்து வீசுவது போல சைகை செய்தார். ஆனால் கடைசி நிமிடத்தில் சண்டிமால் சுதாரித்துக்கொண்டார்.

இதைப்பார்த்த களத்தில் இருந்த அம்பயர்கள் முதல் முறை என்பதால், சண்டிமாலை வெறும் எச்சரிக்கையுடன் விட்டனர். ஆனால் இதை பெவிலியனில் இருந்து கவனித்த இந்திய கேப்டன் விராட் கோலி, ஐசிசி., யின் புதிய விதிமுறைப்படி இந்திய அணிக்கு 5 ரன்கள் வழங்கும்படி கையால் சைகை காட்டினார்.



இலங்கை ரக்பி சம்மேளனமானதுஇ 19 வயதிற்கு உட்பட்ட இலங்கை ரக்பி அணியை பயிற்றுவிக்கும் பொறுப்பை ரஜீவ் பெரேரா மற்றும் இசிபதன கல்லூரி ரக்பி அணியின் தற்போதைய பயிறுவிப்பாளரான லசந்த டி கொஸ்தா ஆகியோருக்கு வழங்கியுள்ளது. எதிர்வரும் 19 வயதிற்கு உட்பட்ட ஆசிய ரக்பி தொடரை கருத்திற்கொண்டு இந்நியமனங்கள் இடம்பெற்றுள்ளது.

இவ்வருடம் 19 வயதிற்கு உட்பட்ட ஆசிய ரக்பி தொடரானது புதிய முறையில் நடைபெறவுள்ளது. இலங்கை மற்றும் ஹொங்கொங் அணிகள் மட்டுமே முதற் தர பிரிவில் விளையாடவுள்ளதுடன்இ சைனீஸ் தாய்பே அணி விளையாடவில்லை. ஆதலால் இலங்கை மற்றும் ஹொங்கொங் அணிகள்இ தத்தமது சொந்த நாட்டில் இரண்டு போட்டிகளில் பலப் பரீட்சை நடாத்தவுள்ளன.

இலங்கையில் முதலாவது போட்டி டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளதோடுஇ தொடர்ந்து இரண்டாவது போட்டி 16 ஆம் திகதி ஹொங்கொங் நாட்டில் நடைபெறவுள்ளது.

நீண்ட காலமாக தேசிய அணியில் பிரதி பயிற்றுவிப்பாளராக கடைமையாற்றும் பெரேராஇ இவ் இளம் அணியை வெற்றியின் பாதையில் அழைத்துச் செல்வதற்காக எதிர்பார்த்திருக்கிறார். ஹெவலொக் ரக்பி கழகத்தின் முன்னாள் தலைவரான இவர்இ இறுதியாக 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற கழக மட்ட போட்டிகளில் சம்பியன் பட்டத்தை வென்ற பின்னர் ஓய்வு பெற்றார். எனினும் மறுபடியும் பயிறுவிப்பாளராக ரக்பி களத்திற்குள் நுழைந்தார்.

கடற்படையை மூழ்கடித்த CR&FC தொடரும் கண்டி அணியின் வெற்றியோட்டம்

பலமுறை இலங்கை தேசிய ரக்பி அணியின் முகாமையாளராக பெரேரா கடமையாற்றியுள்ளதோடு, 2016 ஆம் ஆண்டு கெவின் டிக்சன் தலைமையில் ஆசிய 20 வயதிற்கு உட்பட்ட ரக்பி தொடரில் சம்பியனான இலங்கை அணியின் பிரதி பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நிறைவு பெற்ற ஆசிய அணிக்கு 7 பேர் கொண்ட ரக்பி தொடரின் ஒரு அங்கமாகவும் இவர் காணப்பட்டார்.

முதன் முறையாக தேசிய அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்ட நிலையில், பயிறுவிப்பாளரான லசந்த கொஸ்தாவிற்கு இது சவாலானதாக அமையும் என்பதில் ஐயமில்லை. இசிபதன கல்லூரியின் பழைய மாணவரான இவர், பலமுறை இலங்கை தேசிய அணியில் இடம்பெற்றவர் ஆவார். தான் விளையாடும் காலத்தில் ப்ளை ஹாப் நிலையில் விளையாடிய இவர், இலங்கை அணிக்காக பல வெற்றிகளைத் தேடித்தந்துள்ளார்.

இசிபதன கல்லூரியின் பயிறுவிப்பாளராக தற்போது கடமையாற்றும் இவர், ரக்பி லீக் மற்றும் மைலோ நொக் அவுட் போட்டிகளில் இசிபதன கல்லூரியை இரண்டாம் இடத்திற்கு அழைத்து சென்றவர் ஆவார்.

ரஜீவ் பெரேரா மற்றும் லசந்த கொஸ்தா ஆகிய இருவரும் இரண்டாம் தரநிலை பயிற்றுவிப்பாளர்கள் என்பதோடு, தற்போது 3 ஆம் தரத்தை நோக்கி பயணித்துக்கொண்டு இருப்பவர்கள் ஆவர்.

இவற்றை உயர் நிலை அதிகாரியான இந்தி மரிக்கார் கண்காணிக்கவுள்ளதோடு, தற்போது இத்தொடரிற்கான பயிற்சி குழாமை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

இப்பயிற்றுவிப்பாளர்கள் மீது, இலங்கை இளையோர் அணியை கனிஷ்ட ரக்பி உலக சம்பியன்ஷிப் போட்டிகளுக்கு அழைத்துச் செல்லும் சுமை சுமத்தப்பட்டுள்ளது. இலங்கை அணியின் கடந்த வருட பெறுபேறுகள் சிறப்பானதாக அமையவில்லை. கடந்த வருடம் ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றிபெற்ற இலங்கை அணியானது 3 ஆம் இடத்தையே பெற்றுக்கொண்டது. இவ்வருடம் இலங்கை அணி சொந்த மண்ணில் விளையாடவுள்ளதால், வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் அதிகம் காணப்படுகின்றன.

thepapare


கொச்சியில் இந்தியன் சூப்பர் லீக் எனப்படும் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் கோலாகலமாக நேற்று தொடங்கியது.

கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் அட்லெடிகோ டி கொல்கத்தா ஆடிய முதல் போட்டி டிராவில் முடிந்தது.

ஐ.எஸ்.எல்யின் நான்காவது சீசனான இந்த தொடரில், சென்னையின் எப்.சி, டெல்லி டைனமோஸ், அட்லெடிகோ டி கொல்கத்தா, கேரளா பிளாஸ்டர்ஸ் உள்ளிட்ட பத்து அணிகள் பங்கேற்றுள்ளன.

கொச்சியில் உள்ள நேரு மைதானத்தில் நடந்த தொடக்க விழாவில், இந்தி நடிகர் சல்மான்கான், மம்முட்டி, சச்சின் டெண்டுல்கர், கத்ரீனா கைஃப் ஆகிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், சல்மான்கானும், கத்ரீனா கைஃப்பும் நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.


அதன் பின்னர், மம்முட்டி கால்பந்தினை போட்டி ஒருங்கிணைப்பாளர் நிதா அம்பானியிடம் வழங்க போட்டி தொடங்கியது.



இரவு 8 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான அட்லெடிகோ டி கொல்கத்தா அணியும், கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், இரு அணி கோல் கீப்பர்களும் சிறப்பாக செயல்பட்டதால் கோல் ஏதும் விழவில்லை. இதனால் ஆட்டம் 0-0 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

ஐ.எஸ்.எல் தொடரின் முதல் போட்டி எந்த அணிக்கும் வெற்றி இல்லாமல் டிராவில் முடிவது இதுவே முதல் முறையாகும்.



இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கையின் சுரங்கா லக்மல் அபூர்வ உலக சாதனையை படைத்துள்ளார்.

இலங்கை - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வருகிறது.

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 74 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

கடுமையான மழை காரணமாக இப்போட்டியில் மொத்தமாகவே, இரண்டு நாட்களிலும் சேர்த்து 32.5 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது.

இதில் முதல்நாளில் 6 ஓவர்கள் வீசிய இலங்கை வீரர் லக்மல் ஒரு ஓட்டம் கூட விட்டுக் கொடுக்கவில்லை.

இரண்டாம் நாள் தொடர்ந்து பந்து வீசிய லக்மல் தனது 47வது பந்தில் தான் முதல் ஓட்டத்தை விட்டுக் கொடுத்தார்.

இதன் மூலம் முதல் ஓட்டத்தை விட்டுக்கொடுக்கும் முன் அதிக பந்துகளை கட்டுப்படுத்திய பந்துவீச்சாளர் என்ற புதிய உலக சாதனையை லக்மல் படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் 2001-ல் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டெய்லர் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 40 பந்துகள் வரை கட்டுபடுத்தியதே சாதனையாக இருந்த நிலையில் லக்மல் அதை முறியடித்துள்ளார்.



சந்திக ஹதுருசிங்க , பங்களா தேஷ் கிரிக்கட் அணியின் தலைமைப்பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து விலகி மீண்டும் இலங்கை வருவது தொடர்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது அமைச்சர் தயாசிறி ஜயசேகர கருத்து தெரிவித்திருந்தார்.

இதன் போது அவர் குறிப்பிட்டதாவது , பங்களாதேஷ் தலைமைப் பயிற்றுவிப்பாளராக அதி கூடிய வேதனமொன்றை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் , நாட்டுக்காக இந்த தீர்மானத்தை மேற்கொண்டமை குறித்து நாம் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும் என அமைச்சர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது செய்தியாளர் ஒருவர் , அப்படியென்றால் சந்திக ஹதுருசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த தயாசிறி ஜயசேகர , அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.

இதேவேளை , சந்திக ஹதுருசிங்க பங்களாதேஷ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளதனை தொடர்ந்து பங்களாதேஷ கிரிக்கட் அதிகாரிகள் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.எவ்வாறாயினும் , எதிர்வரும் 2019ம் ஆண்டு வரை ஹதுருசிங்கவின் ஒப்பந்த காலம் உள்ள நிலையில் இவரின் பதவி விலகல் கடிதம் குறித்த தொடர்ந்தும் பங்களாதேஷ் கிரிக்கட் அதிகாரிகளால் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


பனாகொடையில் நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் கழகம் மற்றும் இராணுவப்படை விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான பிரீமியர் எமர்ஜிங் லீக் போட்டியில் இலங்கையின் சகலதுறை வீரர் அசேல குணரத்ன போட்டிக்கான தனது உடற்தகுதியை நிரூபித்துள்ளார்.

இந்தியாவுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது கையில் முறிவுக்கு உள்ளான குணரத்ன தனது காயத்தில் இருந்து முழுமையாக சுகம் பெற்றுள்ளார். எனினும் போட்டிக்கான போதிய உடல் தகுதி இல்லாததால் அவரால் எதிர்வரும் இந்திய தொடருக்கான இலங்கை அணியில் இடம்பிடிக்க முடியாமல்போனது.


“அசேல உடற்தகுதியுடன் இருப்பதோடு மருத்துவ ரீதியிலும் நல்ல நிலையில் உள்ளார். எனினும் அவர் மூன்றரை மாதங்களாக எந்த ஒரு கிரிக்கெட்டிலும் விளையாடவில்லை. உலகின் மிகச் சிறந்த அணியுடன் ஆடும்போது ஆட்ட திறனில் உச்சத்தில் இருக்கும் வீரர்களே தேவைப்படுகின்றனர். எல்லாம் சரியாக இடம்பெற்றால் அவர் ஒருநாள் அணிக்கு திரும்புவார்” என்று இலங்கையின் தேர்வுக் குழுத் தலைவர் கிரேம் லெப்ரோய் குறிப்பிட்டிருந்தார்.



இந்நிலையில் குணரத்ன 10 ஓவர்கள் பந்து வீசி 43 ஓட்டங்களைக் கொடுத்ததோடு ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதேவேளை வலதுகை வேகப்பந்து வீச்சாளர் தரிந்து தர்ஷன 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை கிரிக்கெட் கழகத்தை 200 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இராணுவப்படை விளையாட்டுக் கழகம் ஆட்ட நேர முடிவின்போது 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ஓட்டங்களைப் பெற்றது. குணரத்ன 20 பந்துகளில் 17 ஓட்டங்களை பெற்ற நிலையில் இடது கை சுழல் பந்து வீச்சாளர் நவீன் கவிகாரவின் பந்துக்கு ஆட்டமிழந்தார்.

போட்டியின் சுருக்கம்


இலங்கை கிரிக்கெட் கழகம் – 200 (53.3) – சன்ஜன டி சில்வா 56, ஷமீர வீரசிங்க 47, கீத் குமார 32, மெத்சித் ஜயமான்ன 19, தரிந்து தர்ஷன 5/25, கீதால் பெர்னாண்டோ 3/28

இராணுவப்படை விளையாட்டுக் கழகம் – 139/6 (33) – சன்ஜிக்க ரித்ம 24*, லியோ பிரான்சிஸ்கோ 31, துலின டில்ஷான் 34, சிதும் பீரிஸ் 19, அசேல குணரத்ன 17, நவீன கவிகார 4/45



ஒருகாலத்தில் டோணியின் வலது கையாக செயல்பட்டு வந்தார் தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின்.

இந்திய அணியின் நிரந்தர சுழற்பந்து வீச்சளராக இவர் வருவார் என்று கணிக்கப்பட்டது.


ஆனால் கடந்த நான்கு ஒருநாள் தொடர் எதிலும் அவர் சேர்க்கப்படாமல் இருந்தார். அஷ்வினுக்கு பதிலாக சாஹல், குல்தீப் என்ற இரு புதிய சுழற்பந்து வீச்சாளர்களைக் களம் இறக்கினார் கோஹ்லி.


யோ யோ டெஸ்ட் கடந்த சில மாதமாக அஸ்வின் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் கஷ்டப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் பெங்களூரில் நடந்த யோ யோ டெஸ்டில் அஸ்வின் கலந்து கொண்டார்.

இதில் மிகவும் சிறப்பாக பெர்பார்ம் செய்த அஸ்வின் மொத்த டெஸ்டையும் முழுவதுமாக முடித்தார்.


இது இந்திய வீரர்களை அணியில் சேர்ப்பதற்காக செய்யப்படும் மிக முக்கியமான தேர்வு முறையாகும்.

அணி அறிவிப்பு இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணி இரண்டு நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

கடந்த பல போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


பல நாட்களுக்கு பின் மீண்டும் ஃபீனிக்ஸ் பறவையாக அஸ்வின் இந்திய அணிக்கு வந்து இருக்கிறார். சில நாட்களுக்கு முன் அவர் அளித்த பேட்டியில் ”இந்திய அணி என் வீட்டு கதவை தட்டும்” என குறிப்பிட்டார்.

இப்போது உண்மையாகவே அவர் வீட்டு கதவை பிசிசிஐ தட்டி இருக்கிறது. இலங்கை அணிக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் இந்த தமிழர், டெல்லியில் பிட்சில் மீண்டும் தன் சுழல் திறமையை காட்ட காத்து இருக்கிறார்.



இலங்கை அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளது.

இத்தொடருக்கு 16 வீரர்களின் பட்டியலை இந்திய அணி வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சகல துறை ஆட்டக்காரரான ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அறிவிக்கப்பட்ட 16 பேர் கொண்ட அணியில் அவர் இடம்பெற்றிருந்தாலும், அதிக போட்டிகளில் பங்கேற்றிருப்பதால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் சமீபகாலமாக இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வந்த அஸ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு இத்தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி


விராட் கோஹ்லி (தலைவர்)
கே.எல். ராகுல்
முரளி விஜய்
ஷிகர் தவான்
சட்டீஸ்வர் புஜாரா
அஜிங்கியா ரஹானே (துணைத் தலைவர்)
ரோகித் ஷர்மா
விருத்திமான் சாஹா
ரவிச்சந்திரன் அஸ்வின்
ரவீந்திர ஜடேஜா
குல்தீப் யாதவ்
முகமது ஷமி
உமேஷ் யாதவ்
புவனேஷ்வர் குமார்
இஷாந்த் ஷர்மா



இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடவுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி வருகிற 16ம் திகதி தொடங்கவுள்ள நிலையில் இன்று இரு அணிகளும் மோதும் பயிற்சி ஆட்டம் நடைபெறுகிறது.

இலங்கை அணியை, சஞ்சு சாம்சன் தலைமையிலான 3-ம் நிலை வீரர்களை உள்ளடக்கிய வாரியத் தலைவர் அணி எதிர்கொள்கிறது.

கொல்கத்தாவில் இன்று தொடங்கும் பயிற்சி ஆட்டத்தில் முனைப்புடன் செயல்பட இலங்கை வீரர்கள் தயாராக உள்ளனர்.

சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய மண்ணில் இலங்கை டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது.

ஏற்கனவே ஐக்கிய அரபு எமீரகத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் 2-0 என்ற கணக்கில் வென்றதால் அதே உத்வேகத்துடன் செயல்படவுள்ளது.

இருப்பினும் ஆல் ரவுண்டர் ஏஞ்சலா மேத்யூஸ், மூத்த வீரர் ரங்கன ஹேரத் தவிர மற்ற வீரர்கள் இந்திய மண்ணின் முதன்முறையாக டெஸ்ட் போட்டியை விளையாடவுள்ளனர்.

இதுகுறித்து சஞ்சு சாம்சன் கூறுகையில், ரங்கன ஹேரத் அனுபவம் வாய்ந்த வீரர், அவர்களுக்கு இது பயிற்சி ஆட்டமாக இருந்தாலும் மிகச்சிறந்த வீரரை எதிர்கொள்ள சிறப்பான வாய்ப்பாக எங்களுக்கு அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.



உஷ்ணமான காலநிலையைக் கொண்ட ஐக்கிய அரபு இராச்சியத்தில் அண்மையில் இடம்பெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை ஐந்து பந்து வீச்சாளர்களை தமது குழாமில் உள்ளடக்கியிருந்தது. எனினும், இந்திய அணியுடன் நடைபெறவிருக்கும் டெஸ்ட் போட்டிகளில் இலங்கையை நான்கு பந்துவீச்சாளர்களைக் கொண்ட ஒரு அணியாகவே எதிர்பார்க்க முடியும் என அணித்தலைவரான தினேஷ் சந்திமால் கூறியிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

“பாகிஸ்தானுக்கு எதிராக, நாம் ஆறு துடுப்பாட்ட வீரர்களுடனும் ஐந்து பந்து வீச்சாளர்களுடனும் விளையாடியிருந்தோம். அது உஷ்ணமான காலநிலையில் எமக்கு மிகவும் உதவியாக (ஐக்கிய அரபு இராச்சியத்தில்) அமைந்திருந்தது. எனினும், நான்கு பந்துவீச்சாளர்களுடன் போட்டியொன்றில் வெல்வது இலகுவான விடயமாக அமையாது. இந்தியாவைப் பொறுத்தமட்டில் மிகவும் நல்ல சில பந்துவீச்சாளர்களை அவ்வணி கொண்டுள்ளது, எனவே நாங்கள் சகலதுறை வீரர்களை மையமாகக் கொண்டு போட்டிக்கு தகுதியான அணியை தேர்வு செய்ய வேண்டியுள்ளோம். போட்டிக்கான மைதானத்தை பார்த்த பின்னர் நாம் எமது திட்டங்களை வகுக்கவுள்ளோம்“ என சந்திமால் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவுடனான அண்மைய தொடரில் அனைத்துப் போட்டிகளிலும் (9-0 என) சொந்த மண்ணில் வைத்து தோல்வியடைந்த இலங்கை அணி, அயல்நாடு ஒன்றில் பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றிய போதிலும் ஒரு நாள் தொடரை 5-0 என பறிகொடுத்திருந்தது.

“எம் எல்லோருக்கும் இந்தியா (டெஸ்ட்) தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது என்பது தெரியும். அத்தோடு கடந்த இரண்டு வருடங்களாக அவர்கள் முன்னேற்றகரமான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிக்காட்டி வருகின்றனர். நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக மிகவும் சிறந்த முறையில் செயற்பட்டிருந்தோம். ஒரு அணியாகவும் சிறப்பாக செயற்பட்டிருந்தோம். இந்தியாவுடனான இத்தொடரை எமது வீரர்கள் ஒரு சவாலாக எடுத்து அதில் நல்ல முடிவுகளைத் தருவார்கள் என உறுதியாக நம்புகின்றேன்“ என்று சந்திமால் கூறியிருந்தார்.

அத்தோடு இந்தியாவுடன் விளையாடுவது மிகவும் கடினமான விடயம் என்பதையும் ஒப்புக் கொண்ட சந்திமால், இலங்கையின் கடந்த கால முடிவுகளால் மனம் தளரப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.

“இது எமக்கு மிகவும் சவாலான ஒரு தொடராக அமையவுள்ளது. எனினும் இங்கிருக்கும் பார்வையாளர்களினால், நாம் இங்கே விளையாட மிகவும் விரும்புகின்றோம். நான் எமது கடந்த காலத்தை பின்னோக்கி பார்க்க விரும்பவில்லை. நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிராக (டெஸ்ட்) தொடரில் சிறந்த பதிவைக் காட்டியிருந்தோம். தற்போது எமது வீரர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கான உரிய தரத்தில் காணப்படுகின்றனர். எனவே இனி நாம் வருகின்ற இந்த சவாலை முகம் கொடுக்கத் தயராகுவோம்“ என சந்திமால் கூறியிருந்தார்.


இந்திய அணியின் நட்சத்திர சுழல் வீரர்களான ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோரையும் எதிர்கொள்வதற்கான உத்திகளையும் திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்த சந்திமால் அவற்றை தற்போது அறியத்தரப்போவதில்லை எனவும் கருத்து வெளியிட்டிருந்தார்.

“ஒரு அணியாக நாம் சில திட்டங்களை எங்களுக்குள்ளேயே பேசி வைத்துள்ளோம். அதனை மைதானத்தில் மாத்திரமே நாங்கள் செயற்படுத்த வேண்டும் அப்போதே அவற்றின் துணையோடு இந்தியாவுடன் போட்டியை வெற்றி கொள்ள முடியும்“ என டெஸ்ட் போட்டிகளுக்கான பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்ட பின்னர் சந்திமால் பேசியிருந்தார்.

1982ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி அந்நாட்டு மண்ணில் ஒரு போட்டியில் கூட இதுவரையில் வெற்றி பெறவில்லை. இதனை மாற்றுவதில் நம்பிக்கை கொண்டிருப்பதாக சந்திமால் மேலும் தெரிவித்திருந்தார்.

“இந்திய மண்ணில் இதுவரையில் நாம் எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெறவில்லை. எங்கள் அனைவருக்கும் அது ஒரு கனவாக காணப்படுகின்றது. இதுவே நாம் கொல்கத்தாவில் விளையாடும் முதல் போட்டியும் கூட. கொல்கத்தா ரசிகர்களின் முன்னாள் விளையாடுவது எமக்கு மகிழ்ச்சியான விடயமே. ஒரு அணியாக நாம் நல்ல முறையில் ஆரம்பித்து அதனை அப்படியே தொடர வேண்டும்“

“இந்தியாவில் எனக்கு இதுவே முதல் (டெஸ்ட்) தொடர். இன்னும் அஞ்செலோ மெதிவ்ஸ் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோரைத் தவிர ஏனைய அனைத்து வீரர்களுக்கும் இந்தியாவில் முதல் தொடர் இது என்பதால், ஒவ்வொருவருக்கும் இது நல்ல சவாலாகவே அமையும்.”

ஊடகவியலாளர்கள் எப்படி நீங்கள் அஷ்வின், ஜடேஜா போன்றோரை எதிர்கொள்ளப்போகின்றீர்கள் எனக் கேட்டதற்கு சந்திமால் இவ்வாறு பதிலளித்தார், “அவர்கள் இருவரும் டெஸ்ட் தரவரிசைப்பந்து வீச்சாளர்களில் முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தில் காணப்படுகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாகவும் அவர்களது பந்துவீச்சு சிறப்பாக இருக்கின்றது. எங்கள் திட்டங்களை நாங்கள் உங்கள் முன் கூறவிரும்பவில்லை“

“இந்தியாவுடனான போட்டித் தொடரில் வெற்றிகொள்வதற்கு சில திட்டங்களை எங்களுக்குள் இரகசியமாக வைத்துள்ளோம். நாம் இன்னும் ஒரு வாரத்தில் அவர்களுக்கு எதிராக என்ன திட்டங்களை பயன்படுத்தப் போகின்றோம் என்பதை நீங்களே பார்ப்பீர்கள்.“



பங்களாதேஷ் தலைமைப் பயிற்சியாளர் சந்திக்க ஹதுருசிங்க தனது ராஜினாமா கடிதத்தை பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு (BCB) கையளித்துள்ளார். அவரது ஒப்பந்தக் காலம் 2019ஆம் ஆண்டு வரை நீடிக்கும் நிலையிலேயே இந்த ராஜினாமா அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த ஜுன் மாதம் கிராஹம் போர்ட் ராஜினாமா செய்தது தொடக்கம் இலங்கைஅணியின் தலைமை பயிற்சியாளர் பதவி காலியாக உள்ள நிலையில், ஹதுருசிங்க2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் மூன்று வருட காலத்திற்கு இலங்கைதேசிய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கவிருப்பதாகநம்பகமான வட்டாரங்கள் மூலம்  தெரியவருகிறது.



இலங்கை அணியின் நிழல் பயிற்சியாளராக செயற்பட்ட ஹதுருசிங்கவை 2010ஆம்ஆண்டு இலங்கை கிரிக்கெட் சபை அப்பதவியில் இருந்து நீக்கியதை அடுத்து அவர் அவுஸ்திரேலியாவை நோக்கி பயணித்தார்.

தான் ஆடிய காலத்தில் ஒரு நிலையான ஆரம்பத் துப்பாட்ட வீரராக செயற்பட்டஹதுருசிங்க இலங்கைக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். 10, 861 முதல்தரஓட்டங்கள் மற்றும் 425 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் ஹதுருசிங்க அதிகஅனுபவம் கொண்ட முதல்தர கிரிக்கெட் வீரராக இருந்தார்.

கிரஹம் போர்டின் விலகலுக்கு பின், களத்தடுப்பு பயிற்சியாளர் நிக் போதாஸைஇடைக்கால தலைமைப் பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் சபை நியமித்தது. அவர்இலங்கை அணியின் ஜிம்பாப்வே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் தொடர்களில்பயிற்சியாளராக செயற்பட்டுள்ளார்.

இந்நிலையில், மாதத்திற்கு 30,000 டொலர்கள் (4.6 மில்லியன் ரூபாய்) சம்பளத்திற்கு ஹதுருசிங்க இணங்கியதாக க்கு மேலும் தெரியவருகிறது. 

இலங்கை கிரிக்கெட் சபை தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லி டி சில்வா கடந்த வாரம்இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியதாவது,

“நாம் ஒருசில பயிற்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். நிக் போதாஸ்உட்பட 3-4 பேர் அடங்குகின்றனர். இந்த ஆண்டு இறுதியில் நாம் இந்த நியமனத்தைஉறுதி செய்வோம். அடுத்த ஆண்டு ஜனவரியில் நிரந்த தலைமை பயிற்சியாளர் ஒருவர்இருப்பார் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார். 



ஹதுருசிங்கவின் பயிற்சியின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் பங்களாதேஷ் பெரும்முன்னேற்றம் கண்டது. 2015 உலகக் கிண்ணப் போட்டியின் காலிறுதிக்கு முன்னேறியபங்களாதேஷ் 2017 சம்பியன்ஸ் கிண்ணத்தின் அரையிறுதி வரை முன்னேற்றம்கண்டது. அதேபோன்று உள்நாட்டில் நடந்த இரு தரப்பு தொடர்களில் பங்களாதேஷ்அணி பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளையும் வீழ்த்தியது.

டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்தபங்களாதேஷ் சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராகவும் வெளிநாட்டில்இலங்கைக்கு எதிராகவும் இந்த ஆண்டில் முதல் வெற்றியை பெற்றது. 

இலங்கை கிரிக்கெட் சபை கடந்த வாரம் மூன்று ஆண்டு காலத்திற்கு துடுப்பாட்டபயிற்சியாளராக திலான் சமரவீரவின் சேவையை பெற்றது. எதிர்வரும் இந்திய சுற்றுப் பயணம் முதல் அவரது ஒப்பந்தம் ஆரம்பமாகிறது. ஹதுருசிங்கவின் பரிந்துரையின்கீழ் சமரவீர 2016 ஆம் ஆண்டு பங்களாதேஷின் துடுப்பாட்ட ஆலோசகராகபணியாற்றியமையும் குறிப்பிடத்தக்கது. 

புதிய மாற்றங்களை மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும்ஒரு T20 போட்டி என்பவற்றில் ஆடுவதற்கு அடுத்த ஆண்டு பங்களாதேஷ்சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

thepapare



இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ந்தியா வரும் இலங்கை கிரிக்கெட் அணி, 3 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடர் வரும் நவம்பர் 16ல் கொல்கத்தாவில் துவங்குகிறது. டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கும் அணியை சமீபத்தில் இலங்கை கிரிக்கெட் போர்டு (எஸ்.எல்.சி..,) அறிவித்தது.


இந்நிலையில் டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் போர்டு (பிசிசிஐ.,) தற்போது அறிவித்துள்ளது. அதில், இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பதால், காயம் ஏற்படுவதை தவிர்க்கவே பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும், தவிர, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பாண்டியா பயிற்சி மேற்கொள்வார் என்றும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி விவரம்:

கோலி (கேப்டன்), ரகானே (துணைக்கேப்டன்), முரளி விஜய், கே.எல்.ராகுல், ஷிகர் தவான், புஜாரா, ரோகித் சர்மா, சகா, அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா.





இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை – இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 16-ஆம் திகதி இந்தியாவின் கொல்கத்தா நகரில் தொடங்கவுள்ளது.

இந்த தொடருக்கான இலங்கை அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

தினேஷ் சண்டிமால் தலைமையில் களமிறங்கவிருக்கும் இலங்கை அணியில் முன்னணி வீரர்களான அசேல குணரட்ண, ஏஞ்சலோ மேத்யூஸ், குசல் பெரேரா ஆகியோர் மீண்டும் இடம்பெறுள்ளனர்.

இலங்கை அணி விபரம் வருமாறு,

தினேஷ் சண்டிமால் (தலைவர்) குசல் சில்வா, திமுத் கருணரத்ன, குசல் மெண்டீஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், குசல் பெரேரா, நிரோஷன் டிக்வெல்ல, அசேல குணரட்ன, ரங்கன ஹேரத், தில்ருவான் பெரேரா, லஷான் சந்தகான், தம்மிக்க பிரசாத், நுவான் பிரதீப், சுரங்க லக்மால், மலிந்த புஸ்பகுமர.




ராஜ்கோட்டில் நடைபெற்ற இரண்டாவது டி-20 போட்டியில் 40ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்துவெற்றி பெற்றது.


இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டி20போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது.டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.இந்திய அணியில் முகம்மது சிராஜ் புதுமுகமாககளமிறங்கினார். கப்தில் மற்றும் முன்ரோ தொடக்கஆட்டக்காரர்களாக பேட்டிங் செய்தனர்.

இருவரது அதிரடியை கட்டுபடுத்த முடியாமல் இந்திய பவுலர்கள்திணறினர். 11 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை கடந்தது. 12வது ஓவரை வீசிய சாகல் கப்திலை வெளியேற்றினார்.

இதனையடுத்து களமிறங்கிய வில்லியம்சன் 12 ரன்களில்புதுமுக பவுலர் சிராஜ் பந்தில் ரோகித் வசம் கேட்ச் கொடுத்தார்.ஆனாலும் முன்ரோ சிக்சர்கள், பவுண்டரிகளுடன் 54 பந்துகளில்தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். 20 ஓவர்கள்முடிவில் நியூசிலாந்து அணி 196 ரன்கள் குவித்தது. முன்ரோ 109ரன்களுடனும், ப்ரூஸ் 18 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.இந்திய தரப்பில் சாகல், சிராஜ் தலா ஒரு விக்கெட்டுகளைவீழ்த்தினர்.


இதையடுத்து, 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாகரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் இறங்கினர். ஆனால்நியூசிலாந்து பவுலர்கள் 2-வது ஓவரிலேயே இருவரையும்வெளியேற்றி அதிர்ச்சி அளித்தனர். ரோகித் 5 ரன்னுடனும்,தவான் ஒரு ரன்னுடனும் வெளியேறினர். 11 ரன்களுக்கு 2விக்கெட் இழந்தது.

அதன்பின் களமிறங்கிய ஷ்ரேயஸ் ஐயரும், விராட் கோலியும்ஓரளவு தாக்குப் பிடித்தனர். இந்த ஜோடி 53 ரன்கள் சேர்த்தது.ஷ்ரேயஸ் ஐயர் 23 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவரைதொடர்ந்து இறங்கிய ஹர்திக் பாண்ட்யா ஒரு ரன்னில்வெளியேறினார்.

விராட் கோலி மட்டும் அதிரடியாக ஆடி 42 பந்துகளில் 61 ரன்கள்எடுத்து ஆட்டமிழந்தார். தோனியுடன் இணைந்து 56 ரன்கள்சேர்த்தார்.


அவரை தொடர்ந்து களமிறங்கிய அக்சர் படேல் 5 ரன்களில்ஆட்டமிழந்தார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் தோனி 37 பந்துகளில் 3 சிக்சர், 2 பவுண்டரியுடன் 49ரன்களில் அவுட்டானார். இதையடுத்து 40 ரன்கள்வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. 20 ஓவர் முடிவில்இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது.புவனேஷ்வர் குமார் 2 ரன்னுடனும், பும்ரா ஒரு ரன்னுடனும்களத்தில் இருந்தனர். நியூசிலாந்து தரப்பில் போல்ட் அற்புதமாகபந்து வீசி 34 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் கைப்பற்றினார்.


இதன்மூலம் நியூசிலாந்து தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. மூன்றாவது போட்டி திருவனந்தபுரத்தில் வரும் 7-ம்தேதி நடைபெறுகிறது.



இலங்கை கிரிக்கட் டெஸ்ட் அணித் தலைவர் தினேஸ் சந்திமால் வெளியிட்ட கருத்தொன்றை, பாகிஸ்தான் அணித் தலைவர் சஃப்ராஸ் அஹமட் மறுத்துள்ளார்.


பாகிஸ்தானுக்கு எதிராக ஐக்கிய அரபு ராச்சியத்தில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், மந்திரசக்தியாலேயே வெற்றிப் பெற்றதாக அண்மையில் இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் கூறி இருந்தார்.


ஆனால் இந்த கருத்தை பாகிஸ்தான் அணித் தலைவர் சஃப்ராஸ் அஹமட் முற்றாக நிராகரித்துள்ளார்.


மோசமான துடுப்பாட்டத்தின் காரணமாகவே பாகிஸ்தான் அணி இந்த போட்டிகளில் தோல்வி அடைந்தது.


இலங்கை அணி மந்திரசக்தியால் டெஸ்ட் போட்டிகளை வெற்றி பெற்றிருந்தால், ஏனைய ஒருநாள் மற்றும் 20க்கு20 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்று சஃப்ராஸ் தெரிவித்துள்ளார்.


இதேவேளை சஃப்ராஸின் இந்த கருத்தை பாகிஸ்தானிய முன்னாள் கிரிக்கட் வீரர் மொஹமட் யூசுப் ஆமோதித்துள்ளார்.


'கிரிக்கட்டையும் மந்திரங்களையும் இணைக்க வேண்டாம்' என்று அவர் கோரியுள்ளார்.

Jaffna Muslim



இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியிலிருந்து நட்சத்திர வீரர் குஷால் மெண்டிஸ் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து தேர்வுக்குழுவின் இந்தச் செயலுக்காக, இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மகேல ஜெயவர்த்தன கடும் கண்டனங்களை ருவிற்றர் பதிவு மூலம் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு கூட இளம் வீரர்கள் அழைத்துச் செல்லப்படாதவிடத்து எங்கே அவர்கள் அனுபவங்களைப் பெற போகின்றார்கள்?? என மகேல மேலும் கேள்வி எழுப்பி உள்ளார்.

vilaiyattu



டெல்லியில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தி நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதையடுத்து மூன்று டி-20 போட்டிகளை கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்றார் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.


இரண்டாவது டி-20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று மாலை நடக்க இருக்கிறது.

மேலும் இந்திய அணியில் ஓய்வுபெற்ற நெஹ்ராவுக்கு பதில் புதிய பிளேயர் ஒருவர் சேர்க்கப்பட இருக்கிறார்.

முதல் போட்டி முடிந்த பிறகு கோஹ்லி கொடுத்த பேட்டியில் டி-20 போட்டியில் அதிக பவுலர்களுடன் களம் இறங்குவதையே தான் விரும்புவதாக கூறினார்.

ஓய்வுபெற்ற நெஹ்ராவுக்கு பதில் பவுலிங் செய்யக்கூடிய வீரர் விளையாடுவார் என கூறப்படுகிறது.

எனவே ஆல்ரவுண்டர் முகமது சிராஜ் முதல்முறையாக அணியில் இணைவார் என எதிர்பார்க்கபடுகிறது.



வாங்கிய அடியை மறக்காத நியூசி.., முதலில் பந்துவீசுகிறது இந்தியா 


இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.


இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவுடன் 3 டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.



இந்த தொடரில் கடந்த 1ம் தேதி டெல்லியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.


மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டி.20 போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது.


இதில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.









இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முதல் போட்டியுடன் ஓய்வு பெற்றுவிட்டதால், அவருக்கு பதிலாக கஷ்மீரை சேர்ந்த முகமது ஸிராஜ், இன்றைய போட்டி மூலம் அறிமுக வீரராக களமிறங்குகிறார்.
அணி விபரம்;

IND XI: RG Sharma, S Dhawan, V Kohli, MS Dhoni, H Pandya, S Iyer, A Patel, B Kumar, M Siraj, Y Chahal, J Bumrah




ராஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள புஜாரா 70 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.


இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ராஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. தற்போது இதன் நான்காவது சுற்று போட்டிகள் நடக்கிறது.

இதில் சவுராஸ்டிரா அணி, ஜார்கண்ட் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் சவுராஸ்டிரா அணிக்காக களமிரங்கிய புஜாரா 204 ரன்களை குவித்தார்.

இரட்டை சதம் அடித்த புஜாரா, முதல் தர போட்டிகளில் தனது 12 வது இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் முதல் தர போட்டியில் அதிக இரட்டை சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்.

இந்த சாதனையை சுமார் 70 ஆண்டுகளாக எந்த இந்திய வீரர்களும் எட்டியதில்லை. இந்நிலையில் புஜாரா இதை முறியடித்துள்ளார்.





(Asela Gunerathne return Sri Lanka Squad 2017)

இலங்கை அணியின் சகலதுறை வீரர் அசேல குணரத்ன உபாதையிலிருந்து குணமாகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாக அதிகாரி அஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.

அசேல குணரத்னவின் உபாதை குணமாகவில்லையென செய்தி வெளியிடப்பட்டிருந்த போதும், அஷ்லி டி சில்வா மற்றும் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் நிக் போதஸ் ஆகியோர், அசேல குணரத்ன உபாதையிலிருந்து குணமாகியுள்ளமையை உறுதிசெய்துள்ளனர்.

இதேவேளை எஞ்சலோ மெத்தியூஸ் மற்றும் குசல் ஜனித் பெரேரா ஆகியோரும் உபாதையிலிருந்து நீங்கியுள்ளதாகவும் கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் அசேல குணரத்ன, குசல் பெரேரா மற்றும் எஞ்சலோ மெத்தியூஸ் ஆகியோரை அணியில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்திய தொடருக்கான இலங்கை குழாம் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

MARI themes

Powered by Blogger.