டெல்லியில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 53 ரன்கள் வித்தியாசத்தி நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதையடுத்து மூன்று டி-20 போட்டிகளை கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்றார் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இரண்டாவது டி-20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று மாலை நடக்க இருக்கிறது.
மேலும் இந்திய அணியில் ஓய்வுபெற்ற நெஹ்ராவுக்கு பதில் புதிய பிளேயர் ஒருவர் சேர்க்கப்பட இருக்கிறார்.
முதல் போட்டி முடிந்த பிறகு கோஹ்லி கொடுத்த பேட்டியில் டி-20 போட்டியில் அதிக பவுலர்களுடன் களம் இறங்குவதையே தான் விரும்புவதாக கூறினார்.
ஓய்வுபெற்ற நெஹ்ராவுக்கு பதில் பவுலிங் செய்யக்கூடிய வீரர் விளையாடுவார் என கூறப்படுகிறது.
எனவே ஆல்ரவுண்டர் முகமது சிராஜ் முதல்முறையாக அணியில் இணைவார் என எதிர்பார்க்கபடுகிறது.


Post a Comment