திருப்பூரில் பெண் ஒருவர் சாலையில் அடையாளம் தெரியாத ஒருவரால் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
அவரின் சடலத்திற்கு அருகில் ஒன்றரை வயது ஆண் குழந்தை அழுதுகொண்டே இருந்தது.
இதனை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் .
விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் குழந்தையை மீட்டு அந்த குழந்தை யார்? இந்த கொலைக்கான காரணம் என்ன என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Post a Comment