கின்னஸ் சாதனைக்காக செய்யப்பட்ட திருமணம் சர்ச்சையில் முடிவு!!



கண்டி, கன்னோருவ பிரதேசத்தில் நேற்று கின்னஸ் சாதனைக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திருமண நிகழ்வு சர்ச்சையில் நிறைவடைந்திருக்கின்றது.

இது தொடர்பில் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கண்டி – கொழும்பு வீதியில் பாடசாலை மாணவர்கள் பாடசாலை சீருடையில், மணமகளின் ஒசரி புடவையை பிடித்து கொண்டு வெயிலில் நின்றமையே இந்த சர்ச்சைக்கு காரணமாகியுள்ளது.

அந்த சந்தர்ப்பத்தில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க கலந்து கொண்டிருந்தார். அவர் தனது பெயரில் ஆரம்பித்த அலவத்துகொட ஆரம்ப பாடசாலையின் மாணவர்களுடனே இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டார்.

இந்த திருமணத்தின் காரணமாக வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் அதனை கட்டுப்படுவதற்காக பேராதனை பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

மணமகள் 3,200 மீற்றர் நீளமான ஒசரி புடவையை இதற்காக அணிந்துள்ள நிலையில் அது இன்னமும் உத்தியோகபூர்வமாக கின்னஸ் சாதனையாக அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.