அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் விரிவுரை பிரிவு இயங்கும் 6 மாடி கட்டடத்தில் இருந்து குதித்து நோயாளி ஒருவர் இன்று காலை தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
நான்காவது மாடியில் தங்கி சிகிச்சை பெற்று வந்த 57 வயதான நோயாளியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மினுவங்கொடை – கலஹாகொடை பிரதேசத்தை சேர்ந்த இந்த நோயாளி வயிற்றுவலி காரணமாக நேற்று முன்தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Post a Comment