ஸ்ரீலங்கா நடிகரை அணுவணுவாகக் கொன்ற பயங்கர விளையாட்டு!



ஸ்ரீலங்காவில் அண்மையில் தற்கொலை செய்துகொண்ட பிரபல நடிகர் தசுன் நிஷான் தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணம் தற்பொழுது வெளியாகியுள்ளது.
இவர் உலகில் பலரின் வாழ்க்கையைப் பறித்த அதிபயங்கர விளையாட்டான ப்ளூவேல் விளையாட்டிற்கு அடிமையாகியுள்ளதாக அரச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தசுன் மன ரீதியில் அதிகம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அதனாலேயே தற்கொலையினை நாடியுள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.


இணையதளங்களில் தற்கொலை தொடர்பான காணொளிகளை அவர் அதிகம் பார்வையிட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதில் தற்கொலை செய்யும் முறை தற்கொலை செய்யும் இடம் என்பன குறித்து தசுனின் தேடல் அமைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் அவர் தற்கொலைக்காக தன்னை சில காலமாகவே தயார்ப்படுத்தி வந்திருக்கிறார் என்பது நிரூபனமாகின்றது.


மேலும் மன ரீதியில் பாதிக்கப்பட்டிருந்த தசுன், மது பாவனைக்கு அடிமையாகியுள்ளதோடு தற்கொலைக்கு முதல் இறுதியாக தனது முக நூல் பக்கத்தில் மாறுபட்ட மன நிலையை வெளிப்படுத்தும் விதமாக பதிவிட்டிருந்தமை குறித்தும் அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.