ஏ.ஆர்.எம்.ரபியூதீன்(ஊடகவியலாளர்)
அநுராதபுரம் நகரம் உட்பட அநுராதபுர மாவட்டத்திலுள்ள அனைத்து உணவகங்கள் ஹோட்டல்களில் தேநீரின் விலைகள் அதிகரித்துள்ளதாக பாவணயாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தேநீரின் விலை 20 ரூபா வாகவும்,பால் தேநீர் 40 ரூபாவாகவும் அதிகரிக்கப் பட்டுள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.இது சம்பந்தமாக ஹோட்டல் உரிமையாளர் ஒருவரிடம் கேட்டபோது எரிவாயு விலை அதிகரிப்பால் உணவு,பான வகைகளின் விலை அதிகரிக்கப் பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தற்கிணங்கவே 15 ரூபாவாக காணப்பட்ட ஒரு கோப்பை தேநீரின் விலை 20 ரூபாவாகவும்,ஒரு கோப்பை பால் தேநீரின் விலை 40 ரூபாவாகவும் அதிகரிக்கப் பட்டுள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது சம்பந்தமாக கருத்து தெரிவித்த பாவனையாளர் ஒருவர் விலை சற்று அதிகரித்தால் உடனே விலைகள் கூடும் .ஆனால் விலைகளில் சற்று குறைவு ஏற்பட்டால் பொருட்களின் விலைகள் ஒரு நாளும் குறையாது.இது தான் உண்மையான நிலை என தெரிவித்தார்.


Post a Comment