பால்கர் மாவட்டம் விரார் கிழக்கு காஸ்கோப்ரி பகுதியை சேர்ந்தவர் சோம்நாத் . இவருடைய நண்பர் ஆனந்தா இவருக்கு மும்பை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.60 ஆயிரம் வாங்கியிருக்கிறார்.
இந்த பணத்தை சோம்நாத் தனது தந்தையிடம் இருந்து கடனாக வாங்கி, ஆனந்தாவிடம் கொடுத்து உள்ளார்.
ஆனால் ஆனந்தா விமான நிலையத்தில் வேலை வாங்கிக்கொடுக்காமல் ஏமாற்றி விட்டார். இதனால் சோம் நாத் விரக்தி அடைந்தள்ளார்.
இந்நிலையில் நேற்று நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த சோம்நாத் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அப்போது தரையில் கிடந்த அவரது செல்போனை எடுத்து போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் தூக்கில் உயிருக்கு போராடியபடி தொங்கும் ‘செல்பி’ புகைப்படம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அவர் எழுதிவைத்த கடிதம்கிடைத்தது.அதில் தனது இந்த முடிவுக்கு ஆனந்தா தான் காரணம் என குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் தனது தந்தையிடமும் மன்னிப்பு கேட்டு எழுதி இருந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment