மன்னர் சல்மானின் அறிவிப்பு, இலங்கையர்களுக்கு பாதிப்பா..? விரிவான சிறப்புப் பார்வை!




சவுதி அரேபியாவில் பெண்கள் வாகனத்தை செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என அந்நாட்டு மன்னர் புதிய சட்டம் ஒன்றை கொண்டு வரவுள்ளார்.

இது சர்வதேச ரீதியில் பாரிய வரவேற்பை பெற்றுள்ளது. எனினும், சவுதி அரேபியாவில் சாரதி தொழிலில் ஈடுபட்டுள்ள பலருக்கும் இது பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக சவுதி அரேபியாவில் இலங்கை மற்றும் இந்திய நாட்டை சேர்ந்தவர்களே சாரதியாக கடமையாற்றி வரும் நிலையில், அந்நாட்டு மன்னரின் அறிவிப்பால் பலரும் வேலை இழக்கும் ஆபத்து இருப்பதாக அச்சம் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சவுதி அரேபியா நாட்டின் உள்துறை அமைச்சின் தகவல்படி, 190,000 இலங்கையர்கள் அந்நாட்டில் தொழில் செய்து வருகின்றனர் என சவுதிக்கான இலங்கை தூதுவர் அஸ்மி தாசிம் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களில் சுமார் 90,000 பேர் வீட்டு வேலைகளுடன் தொடர்புடையவர்கள் எனவும், அநேகமானோர் வீட்டுப் பணிப் பெண்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

சவுதி அரேபியாவில் நிறுவனங்களிலும், வீடுகளிலும் வெளிநாட்டவர்கள் சாரதிகளாக கடமையாற்றுகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டில் பெண்களுக்கு வாகனம் செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்படும் பட்சத்தில் நிறுவனங்களில் தொழில் புரியும் சாரதிகள் பாதிப்படைய மாட்டார்கள்.

மாறாக வீடுகளில் சாரதியாக கடமையாற்றுபவர்களுக்கு பாதிப்பாக அமையும்" என அஸ்மி தாசிம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் சாரதிகளுக்கு தட்டுப்பாடு உள்ளதாக சுட்டிக் காட்டியுள்ள சவுதிக்கான இலங்கைத் தூதுவர் அஸ்மி தாசிம், அந்நாட்டில் வீட்டில் சாரதியாக கடமையாற்ற வேண்டும் என்ற ஆர்வம் தற்போது இலங்கையர்களிடம் இல்லை" எனவும் கூறியுள்ளார்.

மேலும், "நிறுவனங்களில் பணி புரியும் சாரதிகளுக்கான உரிமைகள், சலுகைகள் வீட்டு வாகன சாரதிகளுக்கு கிடைப்பது இல்லை. அவர்களின் சுதந்திரம் மட்டுப்படுத்தப்படுகின்றது.

இது போன்ற காரணங்களினால் இலங்கையர்கள் குறிப்பாக வீட்டு சாரதி வேலை வாய்ப்பு தொடர்பாக ஆர்வம் காட்டுவதில்லை” என சவுதிக்கான இலங்கைத் தூதுவர் குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.