சவுதிஅரேபியா போன்று நாமும் மதுபானத்தை முற்றாகத் தடைசெய்வோம் அல்லது குறைந்த போதையுள்ள பியர் போன்றபானங்களை நாட்டில் அறிமுகம் செய்வோம் என நிதி அமைச்சர்மங்கள சமரவீர தெரிவித்தார்.
சவுதி அரேபியாவைப் போன்று, கை வெட்டுவது, கால்வெட்டுவது, கழுத்து வெட்டுவது போன்ற சட்டங்களை இங்கும்கொண்டுவர வேண்டும்.
வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாவது வாசிப்பு மீதானவிவாதத்தில் கலந்துகொண்டு ஜே.வி.பி. யின் சுனில்ஹதுன்னெத்தி எம்.பி. எழுப்பிய கேள்விக்குப்பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.
சீனி விலை அதிகரிக்கப்பட்டமைக்கு நோயைக் காரணம் காட்டிநியாயம் கூறினார். பியருக்கு சாதாரண பானங்களை விடவும்சீனி அதிகளவு பயன்படுத்தப்படுகின்றது.
அப்படியிருந்தும் பியருக்கான வரி நீக்கப்பட்டுள்ளது ஏன்? எனஹதுன்னெத்தி எம்.பி. வினவியதற்கே அமைச்சர் மங்களஇவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடாத்தியஆய்வொன்றின் படி,
நாட்டில் 49 வீதமானவர்கள் கசிப்பு குடிப்பதாகவும், சாதாரணமதுபானம் பயன்படுத்துபவர்களில் 84 வீதமானவர்கள் அரக்குரக மதுபானத்தைப் பயன்படுத்துகின்றனர்.
வளர்ச்சியடைந்த நாடுகளில் 80 வீதத்துக்கும் அதிகமானவர்கள்பியரே குடிக்கின்றனர். இதில் தான் போதை ஏற்படுத்தும்தன்மை குறைவாகவுள்ளது. இதற்காகவே பியருக்கான வரியைநீக்கினோம். சிறியளவில் மதுபானம் அருந்துவதுதவறில்லையென்பதே எனது நிலைப்பாடு எனவும் அவர் மேலும்குறிப்பிட்டார். DC


Post a Comment