யுவராஜிற்கு சர்வதேச போட்டிகளில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம்!



இந்திய கிரிக்கட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் யுவராஜ் சிங்கிற்கு இனி சர்வதேச போட்டிகளில் வாய்ப்பு கிடைப்பது அரிது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான பயிற்சி போட்டிக்கான 14 பேர் கொண்ட கிரிக்கட் சபைத் தலைவர் குழாமில் வாய்ப்பளிக்கப்படாததை தொடர்ந்தே ஊடகங்கள் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.

அத்தோடு இந்திய கிரிக்கட் அணியின் தேர்வாளர்கள் பட்டியலில் முதல் 74 பேரில் யுவராஜ் சிங்கின் பெயர் உள்ளடக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வாளர்கள் பட்டியலில் இடம்பெறும் முதல் 15 பேருமே சர்வதேச போட்டிகளுக்கு தெரிவு செய்யப்படுவதால் அவர் இடம்பெற வாய்ப்பு இல்லை என இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.